sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 மதுராந்தகம் கோட்டத்தில் கால்நடை மருத்துவர்கள்...பற்றாக்குறை: உரிய சிகிச்சையின்றி கால்நடைகள் இறக்கும் அபாயம்

/

 மதுராந்தகம் கோட்டத்தில் கால்நடை மருத்துவர்கள்...பற்றாக்குறை: உரிய சிகிச்சையின்றி கால்நடைகள் இறக்கும் அபாயம்

 மதுராந்தகம் கோட்டத்தில் கால்நடை மருத்துவர்கள்...பற்றாக்குறை: உரிய சிகிச்சையின்றி கால்நடைகள் இறக்கும் அபாயம்

 மதுராந்தகம் கோட்டத்தில் கால்நடை மருத்துவர்கள்...பற்றாக்குறை: உரிய சிகிச்சையின்றி கால்நடைகள் இறக்கும் அபாயம்


ADDED : ஜூலை 10, 2025 01:30 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் மற்றும் செய்யூர் பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், நோய் வாய்ப்பட்ட கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கோட்டத்தில், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாக்களில் உள்ள 400க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயத்திற்கு அடுத்து கால்நடைகள் வளர்ப்பு அதிகமாக உள்ளது.

அச்சிறுபாக்கம், லத்துார், மதுராந்தகம், சித்தாமூர் ஒன்றியங்களில், 1.20 லட்சத்திற்கும் அதிகமான கறவை மாடுகள் உள்ளன.

3 லட்சத்திற்கும் அதிகமான செம்மறி ஆடுகள், 2 லட்சத்திற்கும் அதிகமான வெள்ளாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாக்களில் மொத்தம், 28 அரசு கால்நடை மருத்துவமனைகள், 7 கால்நடை மருந்தகங்கள் இயங்கி வருகின்றன.

கால்நடை வளர்ப்பவர்கள், தங்கள் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், இந்த கால்நடை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, இந்த இரு வட்டாரங்களில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில், 28 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது 14 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

கப்பிவாக்கம், சூணாம்பேடு, கயப்பாக்கம், செங்காட்டூர், படாளம் உள்ளிட்ட, 14 கால்நடை மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது.

இதனால், ஒரே மருத்துவர் நீண்ட துாரம் பயணம் செய்து, பொறுப்பு கால்நடை மருத்துவராக வேறு ஒரு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. இதனால், மருத்துவர்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.

ஆண்டுக்கு இரண்டு முறை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி, கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

இது தவிர, தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும், மதியம் 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும், மருத்துவமனையில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கு ஒரு உதவி மருத்துவர், ஒரு ஆய்வாளர், ஒரு உதவியாளர் என மூவரும், கிளை நிலையத்திற்கு ஒரு ஆய்வாளர் வீதம் நியமிக்கப்பட்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

அத்துடன், பெரும்பாலான மருந்தகங்களில் உதவியாளர்கள், ஆய்வாளர்கள் பணியிடங்களும் காலியாகவே உள்ளன.

இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல், நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

இதன் காரணமாக, மாடு வளர்க்கும் சில விவசாயிகள், ஓய்வுபெற்ற மருத்துவர்கள், ஊழியர்களை தேடிக் கண்டுபிடித்து, செலவு செய்து தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

பல விவசாயிகள், தனியார் மருந்தகங்களில் மருந்து மற்றும் ஊசிகள் வாங்கி, சுயமாக தங்களின் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இருந்தாலும், அதிகமாக கால்நடைகள் உள்ள மதுராந்தகம் மற்றும் செய்யூர் தாலுகாக்களில் உள்ள மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவர்கள் இல்லாதது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை விரைவில் நிரப்ப, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

பணிச்சுமை அதிகம்


கால்நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது:மதுராந்தகம், செய்யூர் தாலுகாக்களில் கால்நடை மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. தற்போது, கோமாரி நோய் தடுப்பூசி முகாமும் நடந்து வருகிறது. பற்றாக்குறை இருப்பினும், தற்போது உள்ள மருத்துவர்களைக் கொண்டு, கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. கால்நடை ஆய்வாளர் மற்றும் பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன.இதனால், தடுப்பூசி மற்றும் களப்பணி, கணக்கீடு பணிகளும் உள்ளதால், அலைச்சல் அதிகமாக உள்ளது. கால்நடை மருத்துவர்களை விரைவில் நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.@

@

கால்நடைகள் இறக்கும் அபாயம்


கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:தற்போது கால்நடைகளுக்கு கோமாரி, தாடை நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தாக்கும் சூழலில், பல மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவர்கள் இல்லாததால், கால்நடைகள் இறந்து போகும் நிலை உருவாகியுள்ளது.கன்று வீச்சு தடுப்பூசி மற்றும் மழைக்காலத்திற்கு முன் போடப்படும் அடைப்பான் தடுப்பூசி ஆகியவற்றை போட வேண்டும்.மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதால், தனியார் மருத்துவர்களிடம் அதிக விலை கொடுத்து, தடுப்பூசிகள் மற்றும் மருந்து மாத்திரைகள் வாங்க வேண்டிய சூழல் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.








      Dinamalar
      Follow us