sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊனமாஞ்சேரி சந்திப்பில் 'சிக்னல்' பகுதிவாசிகள் வேண்டுகோள்

/

ஊனமாஞ்சேரி சந்திப்பில் 'சிக்னல்' பகுதிவாசிகள் வேண்டுகோள்

ஊனமாஞ்சேரி சந்திப்பில் 'சிக்னல்' பகுதிவாசிகள் வேண்டுகோள்

ஊனமாஞ்சேரி சந்திப்பில் 'சிக்னல்' பகுதிவாசிகள் வேண்டுகோள்


ADDED : பிப் 20, 2025 11:55 PM

Google News

ADDED : பிப் 20, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊனமாஞ்சேரி, கூடுவாஞ்சேரி அடுத்த வண்டலுார் -- கேளம்பாக்கம் இடையிலான 20 கி.மீ., நீளமுள்ள சாலையின் இரு பக்கமும் 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 40க்கும் மேற்பட்ட இணைப்பு சாலைகள், 20க்கும் மேற்பட்ட தனியார் கல்லுாரிகள் மற்றும் பள்ளிகள் உள்ளன.

தாம்பரம், வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி பகுதியிலிருந்து ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள ஐ.டி., நிறுவனங்களுக்கு பணிபுரிய செல்வோர் இந்த சாலையில் தான் செல்ல வேண்டும்.

தவிர, திருப்போரூர் முருகன் கோவில், மாமல்லபுரம் செல்வோர் இந்த வழித்தடத்தையே பயன்படுத்தி வருவதால், நாளுக்கு நாள் வாகன எண்ணிக்கை அதிகமாகிறது.

தற்போது, ஜி.எஸ்.டி., சாலைக்கு நிகராக இந்த சாலையில் வாகனங்கள் பயணிக்கின்றன.

இந்த வழித்தடத்தில், ஊனமாஞ்சேரி சந்திப்பு அதிமுக்கிய பகுதியாக உள்ளது. இந்த சந்திப்பில் திரும்பும் வாகனங்கள், சாலையைக் கடக்கும் பொது மக்கள், பாதுகாப்பாக செல்ல, இங்கு 'சிக்னல்' இல்லை.

தவிர, இந்த சந்திப்பின் அருகிலேயே பேருந்து நிறுத்தமும் உள்ளதால், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இந்த சந்திப்பு உள்ளது.

வாகன ஓட்டிகள் கூறியதாவது:

ஊனமாஞ்சேரி வழியாக மற்ற பகுதிக்கு செல்வோர், இந்த சந்திப்பில் திரும்பி பயணிக்கின்றனர். இதனால், நிமிடத்திற்கு 60க்கும் குறையாத வாகனங்கள் இந்த சந்திப்பை பயன்படுத்தி திரும்பிச் செல்கின்றன.

இங்கு சிக்னல் இல்லாததால், பிரதான சாலையில் நேராக செல்லும் வாகனங்களும், சந்திப்பில் திரும்ப விரும்பும் வாகனங்களும் அடிக்கடி மோதி விபத்தை சந்திக்கின்றன.

குறிப்பாக, 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில், யார் முந்திச் செல்வது என, வாகன ஓட்டிகள் இடையே போட்டி எழுந்து, பல நேரங்களில் வாக்குவாதமும், கைகலப்பும் நிகழ்கிறது.

எனவே, இந்த சந்திப்பில் 'சிக்னல்' அமைப்பது மிக அவசியம். இல்லையேல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us