/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுற்றுலா சார்பு தொழில்புரிவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
/
சுற்றுலா சார்பு தொழில்புரிவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சுற்றுலா சார்பு தொழில்புரிவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சுற்றுலா சார்பு தொழில்புரிவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : டிச 14, 2025 06:02 AM
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பல்வேறு பிரிவினருக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக அரசு, சுற்றுலாத்துறை சார்பில், பல்வேறு தரப்பினருக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளிக்க உத்தரவிட்டது.
இதையடுத்து, மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியில், கடந்த 9ம் தேதி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெ ங்கடேசன், பயிற்சியை துவக்கினார்.நேற்று முன்தினம் வரை, இப்பயிற்சி அளிக்கப்பட்டது.
திருச்சி, துவாக்குடியில் இயங்கும் மாநில ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் கேட்டரிங் தொழில்நுட்ப கல்லுாரி தரப்பில், பேராசிரியர்கள் கோமதி சந்திரலேகா, வினோத்குமார் உள்ளிட்டோர் பயிற்சியளித்தனர்.
சுற்றுலாவை தொழில் சார்ந்து , தொழில் செய்பவர்கள், உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றி, உணவை தரமாக, சுகாதாரமாக வழங்குவது , டாக்சி, ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா இடங்களுக்கு, குறுகிய வழித்தடம் அறிய வே ண்டியது குறித்து பயிற்சி அளித்தனர்.
மொத்தம் 240 பேருக்கு பயிற்சி அளித்து, சான்றிதழ்வழங்கப்பட்டது.

