/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி
/
அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டி
ADDED : செப் 25, 2024 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், அரசு ஊழியர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை, கலெக்டர் அருண்ராஜ் நேற்று துவக்கி வைத்தார். சப் - கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில், கபடி, ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், 800க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்று விளையாடினர். இப்போட்டிகளில் வெற்றிபெறுவோர், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.