sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மண்டல பீச் வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடம்

/

மண்டல பீச் வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடம்

மண்டல பீச் வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடம்

மண்டல பீச் வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் பள்ளி முதலிடம்


ADDED : ஜன 25, 2025 12:22 AM

Google News

ADDED : ஜன 25, 2025 12:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, கல்வித்துறை நடத்திய மண்டல பீச் வாலிபால் போட்டியில், 19 வயது உட்பட்ட பிரிவில், சாந்தோம், செயின்ட் பீட்ஸ் பள்ளி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில், சென்னை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், மண்டல பீச் வாலிபால் போட்டியில், 14, 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகள் சமீபத்தில் நிறைவடைந்தது.

அதைத் தொடர்ந்து, 19 வயதுக்குட்பட்ட மாணவருக்கான மண்டல பீச் வாலிபால் போட்டி, நேற்று முன்தினம் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்தது. முதல் அரையிறுதியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் பள்ளி மற்றும் சோழிங்கநல்லுார் பாரத் தாஸ் பள்ளி அணிகள் மோதின. அதில், 21 -- 14, 21 -- 16 என்ற கணக்கில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மற்றொரு அரையிறுதியில் ஜேப்பியார் பள்ளி, 21 -- 11, 21 -- 16 என்ற கணக்கில், செயின்ட் மேரிஸ் பள்ளி அணியை தோற்கடித்தது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், செயின்ட் பீட்ஸ் மற்றும் ஜேப்பியார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அதில், முதல் செட்டில், தோல்வி அடைந்த சென்ட் பீட்ஸ் அணி, அடுத்தடுத்த செட்களில் சூடு பிடிக்க விளையாட துவங்கியது.

முடிவில், 14 -- 21, 21 -- 19, 15 -- 7 என்ற கணக்கில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற செயின்ட் பீட்ஸ் பள்ளியை, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் இருதயராஜ் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us