sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாநில செஸ் போட்டி செங்கை சிறுவர்கள் அசத்தல்

/

மாநில செஸ் போட்டி செங்கை சிறுவர்கள் அசத்தல்

மாநில செஸ் போட்டி செங்கை சிறுவர்கள் அசத்தல்

மாநில செஸ் போட்டி செங்கை சிறுவர்கள் அசத்தல்


ADDED : செப் 22, 2024 05:33 AM

Google News

ADDED : செப் 22, 2024 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வண்டலுாரில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில், செங்கல்பட்டு மாவட்ட சிறுவர்கள் முதலிடங்களை பிடித்து அசத்தினர்.

மாநில அளவிலான சதுரங்க போட்டி, வண்டலுாரில் உள்ள கிரசண்ட் பள்ளி வளாகத்தில், ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்தது.

போட்டியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் என, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 200க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இதில் ஒன்பது, 13, 17 வயதுடைய இருபாலருக்கும், ஆறு சுற்றுகளாக போட்டி நடைபெற்றது.

அனைத்து போட்டிகள் முடிவில், ஒன்பது வயது சிறுவர் பிரிவில், செங்கை இஷான் பாலாஜி, சிறுமியரில் செங்கை தர்ஷிகா பத்மநாபன் ஆகியோர் முதல் இடங்களைப் பிடித்தனர்.

அதேபோல் 13 வயதில் பிரிதிவ் மற்றும் ஜனனி; 17 வயதில் கவுதம் மற்றும் லீலா நந்தினி ஆகியோரும் முதலிடங்களை பிடித்தனர். முதலிடம் பிடித்த அனைவரும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

போட்டியில் முதல் 20 இடங்கள் பிடித்த, 120 பேருக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us