sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாநில மகளிர் போலீசார் துப்பாக்கி சுடும் போட்டி

/

மாநில மகளிர் போலீசார் துப்பாக்கி சுடும் போட்டி

மாநில மகளிர் போலீசார் துப்பாக்கி சுடும் போட்டி

மாநில மகளிர் போலீசார் துப்பாக்கி சுடும் போட்டி


ADDED : ஜூன் 13, 2024 05:43 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 05:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மகளிர் காவலர்களுக்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி, நாளை முதல் 20ம் தேதி வரை நடக்கிறது.

காவல் துறை சார்பில் நடத்தப்படும் இந்த போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழக கமாண்டோ பள்ளி பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. 13 விதமான போட்டிகள், பல்வேறு பிரிவுகளில் நடக்கின்றன.

காவல் துறை அமைப்புகள், மத்திய ஆயுதப்படைகளின் 30 அணிகளைச் சேர்ந்த எட்டு உயர் அதிகாரிகள் உட்பட, 454 மகளிர் காவலர்கள் பங்கேற்ற உள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில், அணி மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் என, 176 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ராஜரத்தினம் மைதானத்தில் நாளை, தமிழக காவல் துறை டி.ஜி.பி., சங்கர் ஜிவால், துப்பாக்கி சுடுதல் போட்டியை துவக்கி வைக்கிறார்.

போட்டியில் வெற்றி பெறுவோருக்கு, 20ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பரிசுகளை வழங்க உள்ளார்.






      Dinamalar
      Follow us