sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உதவி கேட்பது போல நடித்து கார் ஓட்டுனரிடம் திருட்டு

/

உதவி கேட்பது போல நடித்து கார் ஓட்டுனரிடம் திருட்டு

உதவி கேட்பது போல நடித்து கார் ஓட்டுனரிடம் திருட்டு

உதவி கேட்பது போல நடித்து கார் ஓட்டுனரிடம் திருட்டு


ADDED : செப் 21, 2024 10:03 PM

Google News

ADDED : செப் 21, 2024 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:ராமநாதபுரம் மாவட்டம், வண்ணாங்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகம், 23; கார் ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு 'பாரத் பென்ஸ்' காரில், மறைமலைநகர் வந்த கார்மேகம், ஜி.எஸ்.டி., சாலை அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பி விட்டு ஓய்வு எடுத்துள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் இரு குழந்தைகளுடன் வந்த நபர், தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. மேல்மருவத்தூர் வரை செல்ல வேண்டும் எனக் கூறி பணம் கேட்டுள்ளார்.

கார்மேகம் தன்னிடமிருந்த 200 ரூபாயை கொடுத்துள்ளார். இருசக்கர வாகனத்தில் இருந்த குழந்தை பசி எடுப்பதாக கூறியதால், கார்மேகம் தனது ஏ.டி.எம்., கார்டு மற்றும் எண்ணை அந்த நபரிடம் கூறி 500 ரூபாய் பணத்தை பெட்ரோல் பங்க் வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்தில் எடுத்து வர கூறினார்.

பணம் எடுத்து வர குழந்தைகளுடன் சென்ற நபர் மாயமான நிலையில், கார்மேகத்தின் மொபைல் எண்ணிற்கு 7,000 ரூபாய் ஏ.டி.எம்.,மில் எடுத்தாக குறுஞ்செய்தி வந்தது.

இதுகுறித்து கார்மேகம் காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us