sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மதுராந்தகம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை

/

மதுராந்தகம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை

மதுராந்தகம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை

மதுராந்தகம் நகராட்சியில் தெரு நாய்கள் தொல்லை


ADDED : ஜன 13, 2024 12:55 AM

Google News

ADDED : ஜன 13, 2024 12:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சியில், தெரு நாய்கள் அதிகரித்து விட்டன. இதைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நாய்கள், கூட்டம் கூட்டமாக சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலையின் மையத்தில் உலவுவதால், டூ -- வீலரில் செல்வோர் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர்.

சாலையில் நடந்து செல்வோரை கடிப்பது, குழந்தைகளை துரத்துவது, இறைச்சிக் கடை உள்ள பகுதியில், உணவை தேடி அங்கும், இங்கும் ஓடுவது என, தொடர்ந்து நாய்கள், பகுதிவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக, கூட்டமாக சேரும் நாய்கள், திடீரென்று சாலையின் குறுக்கே ஓடுவதால், பலரும் அலறியடித்து ஓடுகின்றனர். பலரும், 'கடி' வாங்கிய சம்பவங்களும் நடந்துள்ளது.

மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில், நாய்கள் அதிக அளவில் உலா வருவதால், நோயாளிகளை நலம் விசாரிக்க வரும் உறவினர்கள் பயத்துடன் செல்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் சாலையில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us