sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

காட்டாங்கொளத்துார் பள்ளிக்கு மாணவர் வெடிகுண்டு மிரட்டல்

/

காட்டாங்கொளத்துார் பள்ளிக்கு மாணவர் வெடிகுண்டு மிரட்டல்

காட்டாங்கொளத்துார் பள்ளிக்கு மாணவர் வெடிகுண்டு மிரட்டல்

காட்டாங்கொளத்துார் பள்ளிக்கு மாணவர் வெடிகுண்டு மிரட்டல்


ADDED : ஆக 19, 2025 12:11 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், காட்டாங்கொளத்துாரில், தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே பள்ளி மாணவரை, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தாம்பரம் போலீஸ் கமிஷனரக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று அதிகாலை 5:15 மணியளவில் ஒரு அழைப்பு வந்துள்ளது.

அதில் பேசிய நபர், மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள ஜே.ஆர்.கே., பள்ளியில், காலை 8:00 மணிக்கு வெடிகுண்டு வெடிக்குமென, பொத்தேரி மகாத்மா காந்தி சாலையில் நின்று இருவர் பேசிக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.

உடனே, அழைப்பையும் துண்டித்துள்ளார்.

இது குறித்து, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளியில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிந்தது.

மேலும், இதே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர், நேற்று மாதாந்திர தேர்வுக்கு படிக்காததால், பள்ளிக்கு விடுமுறை விட வேண்டும் என்ற நோக்கத்தில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த மாணவரை எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us