sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பூட்டை உடைத்து சுவாமி சிலை, பணம் திருட்டு

/

பூட்டை உடைத்து சுவாமி சிலை, பணம் திருட்டு

பூட்டை உடைத்து சுவாமி சிலை, பணம் திருட்டு

பூட்டை உடைத்து சுவாமி சிலை, பணம் திருட்டு


ADDED : நவ 04, 2024 03:29 AM

Google News

ADDED : நவ 04, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி, ஸ்ரீவாரி நகர் பகுதியில் வசித்து வருபவர் பூர்வேஸ் விஷால், 19. இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊரான விக்கிரவாண்டிக்கு சென்று, நேற்று மாலை 6:00 மணிக்கு, தாய் வரலட்சுமியுடன் திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 600 கிராம் வெள்ளியிலான ராகவேந்திரர், சரஸ்வதி சிலைகள், 50,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.

இது குறித்து, அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us