/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லையில் இன்று தமிழ் சங்க விருதுகள் வழங்கும் விழா
/
மாமல்லையில் இன்று தமிழ் சங்க விருதுகள் வழங்கும் விழா
மாமல்லையில் இன்று தமிழ் சங்க விருதுகள் வழங்கும் விழா
மாமல்லையில் இன்று தமிழ் சங்க விருதுகள் வழங்கும் விழா
ADDED : ஜன 31, 2025 08:51 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யா தலைவர், சிற்பக்கலைஞர் பாஸ்கரன் செயலர் மற்றும் பிற நிர்வாகிகளுடன் மல்லை தமிழ்ச் சங்கம் செயல்படுகிறது.
இச்சங்கம் சார்பில், ஆண்டுதோறும், கலை, இலக்கியம் உள்ளிட்டவற்றில் சிறந்தவர்களுக்கு, விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது.
நடப்பு 2025ம் ஆண்டிற்கான பெருந்தமிழன் விருது, தமிழீழ தேசிய கவிஞர் காசி ஆனந்தனுக்கும், பெருந்தச்சன் விருது, திமிழிசை பாணர் தி.லோ.மகாராஜனுக்கும் வழங்கப்படுகிறது.
மாமல்லபுரம் பே டிரஷர் விடுதியில், இன்று காலை 10:00 மணிக்கு நடைபெறும் விருதுகள் வழங்கும் விழாவில், உலக தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி.பி., சந்தோசம், சென்னை, உயர் நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி வள்ளிநாயகம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும், மல்லை தமிழ்ச் சங்க பாடல், மல்லை சத்யா எழுதியுள்ள தென்னாப்பிரிக்காவில் திருவள்ளுவர், வியட்நாம் புரட்சி, தமிழர்களின் அறச்சீற்றம், மணிமகுடமா, முள்கிரீடமா, கடல் மல்லையிலிருந்து கடாரம் வரையிலான மலேசிய நினைவலைகள், வாகை சூடுவோம் உள்ளிட்ட நுால்கள் வெளியிடப்படுகின்றன.