sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தமிழ் சங்கம் விருதுகள் வழங்கல்

/

தமிழ் சங்கம் விருதுகள் வழங்கல்

தமிழ் சங்கம் விருதுகள் வழங்கல்

தமிழ் சங்கம் விருதுகள் வழங்கல்


ADDED : பிப் 02, 2025 12:06 AM

Google News

ADDED : பிப் 02, 2025 12:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவை தலைவராகவும், சிற்பக்கலைஞர் பாஸ்கரனை செயலராகவும் மற்றும் நிர்வாகிகளுடனும், மாமல்லபுரத்தில் மல்லை தமிழ்ச் சங்கம் செயல்படுகிறது.

இச்சங்கம், ஆண்டுதோறும், கலை, இலக்கியம் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் சான்றோர்களுக்கு, விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது.

நடப்பு 2025ம் ஆண்டின் விருதுகள் வழங்கும் விழா, நேற்று நடந்தது.

தமிழீழ தேசிய கவிஞர் காசி ஆனந்தனுக்கு பெருந்தமிழன் விருது, தமிழிசை பாடகர் திருச்சி லோ.மகாராஜனுக்கு பெருந்தச்சன் விருது வழங்கப்பட்டது.

மேலும் மல்லை சத்யா எழுதியுள்ள தென்னாப்பிரிக்காவில் திருவள்ளுவர், வியட்நாம் புரட்சி, தமிழர்களின் அறச்சீற்றம், மணிமகுடமா, முள்கிரீடமா, கடல் மல்லையிலிருந்து கடாரம் வரையிலான மலேசிய நினைவலைகள், வாகை சூடுவோம் உள்ளிட்ட நுால்கள் வெளியிடப்பட்டன.

உலக தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி.பி., சந்தோசம், சென்னை, உயர்நீதிமன்ற லோக் அதாலத் நீதிபதி வள்ளிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us