/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
/
திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
ADDED : ஜன 28, 2024 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரவாயல்: சென்னை, மதுரவாயல், நுாம்பல் பிள்ளையார் மடம், தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மகான் குட்டி, 27, மெக்கானிக்.
நேற்று முன்தினம் இவருக்கு பிறந்த நாள். நண்பர்களுடன் ஒன்று சேர்ந்து மகான் குட்டி கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். பின் இரவு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவர் அறையில் இருந்து வெகுநேரமாகியும் வெளியில் வரவில்லை.
அறையின் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அங்கு மகான் குட்டி துாக்கில் பிணமாகக் கிடந்தார்.
தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் மகான் குட்டி வற்புறுத்தி வந்துள்ளார். திருமணம் நடக்காத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.