sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

/

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : மே 06, 2025 12:24 AM

Google News

ADDED : மே 06, 2025 12:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு,

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.

சென்னை, சங்கர் நகர் காவல் நிலையை எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 10 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை, 27, என்பவர், 2014 செப்., 19ம் தேதி, சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரையடுத்து, சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், அரசு வழக்கறிஞர் மைதிலி தேவி ஆஜரானார்.

வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், ஏழுமலைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 3 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பின், ஏழுமலையை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us