sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்... 104 இடங்களில் !:ஏப்., வரை செயல்படும் என அறிவிப்பு

/

தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்... 104 இடங்களில் !:ஏப்., வரை செயல்படும் என அறிவிப்பு

தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்... 104 இடங்களில் !:ஏப்., வரை செயல்படும் என அறிவிப்பு

தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்... 104 இடங்களில் !:ஏப்., வரை செயல்படும் என அறிவிப்பு


ADDED : பிப் 07, 2024 11:09 PM

Google News

ADDED : பிப் 07, 2024 11:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:சம்பா, நவரை பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு வந்துள்ளதால், செங்கல்பட்டு மாவட்டத்தில், கூடுதலாக 104 இடங்களில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும், பிப்ரவரி முதல் வாரம் துவங்கி, ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரை செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில், 1,86,257.5 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், அதிகளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

சம்பா பருவத்தில், 25,000 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளன.

மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், கே.எம்.எஸ்., 2023- - 24 பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய, அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், விவசாயிகளிடம் இருந்து உடனடியாக நெல் கொள்முதல் செய்யவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

விவசாயிகள் நலன் கருதி, சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு, 2,310 ரூபாயும், பொது ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு 2,265 ரூபாயும், விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும்போது, 17 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித முறைகேட்டிற்கும் இடமளிக்காத வகையில் பணிபுரிய வேண்டும். குறைபாடுகள் கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, உடனுக்குடன் சம்பந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க, முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, 104 இடங்களில், தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.

இதில், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், 86 கொள்முதல் நிலையங்களும், தேசிய கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவு இணையம், 18 கொள்முதல் நிலையங்களும் அமைக்கின்றன.

இதையடுத்து, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கம் கிராமத்தில் அமைக்கப்பட்ட நெல் கொமுதல் நிலையத்தை, அமைச்சர் அன்பரசன் இன்று துவக்கி வைக்கிறார்.

கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

மாவட்டத்தில், சம்பா, நவரை பருவத்தில் நெல் பயிரிடப்பட்டது. சம்பா பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு வர உள்ளது. அதனால், தற்காலிகமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும், பிப்., முதல் வாரத்தில் துவங்கி, ஏப்., முதல் வாரம் வரை செயல்படும். விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.



- தமிழக நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள்,

செங்கல்பட்டு.



அமைய உள்ள இடங்கள்


வட்டாரம் கிராமம்திருக்கழுக்குன்றம் அட்டவட்டம், நெரும்பூர், தத்தலுார், வீராபுரம், கீரப்பாக்கம், நரப்பாக்கம், விட்டிலாபுரம், ஆயப்பாக்கம், நந்தம்கரியச்சேரி, பொன்பதர்கூடம், பொன்விளைந்தகளத்துார், பெருமாளேரி, பட்டிக்காடு, கிளாப்பாக்கம், குன்னத்துார், ஆனுார், மோசிவாக்கம்.திருப்போரூர் சின்னவிப்பேடு, மடையத்துார், கொட்டமேடு, சிறுதாவூர், அருங்குன்றம், சின்னஇரும்பேடு, சிறுகுன்றம், ரெட்டிகுப்பம், ராயல்பட்டு, முள்ளிப்பாக்கம், ஒரகடம், வெண்பேடு.காட்டாங்கொளத்துார் வில்லியம்பாக்கம், திருவடிசூலம், களிவந்தப்பட்டு, கருநிலம்.பவுஞ்சூர் கொடூர், முகையூர், சோழக்கட்டு, அம்மனுார், மடையம்பாக்கம், நெமந்தம், பச்சம்பாக்கம், நீலமங்கலம், செய்யூர், வடக்கு வாயலுார், அணைக்கட்டு, லத்துார், பெரியவெளிக்காடு, செம்பூர்.சித்தாமூர் முகுந்தகிரி, காவனுார், இல்லீடு, சூணாம்பேடு, பொலம்பாக்கம், சிறுமயிலுார், கன்னிமங்கலம், பருக்கல், புத்திரன்கோட்டை, வெடால், நாங்களத்துார், நுகும்பல், அரசூர், இரும்புலி, இந்தலுார், பெரியகயப்பாக்கம்.மதுராந்தகம் பழையனுார், காவாத்துார், வில்வராயநல்லுார், தொன்னாடு, ஜமீன்பூதுார், மதுராந்தகம், நெல்லி, நெல்வாய், அரியனுார், சூரை, வேடவாக்கம், அண்டவாக்கம், சிறுநல்லுார், பெருவேலி, கிணார், வீராணக்குன்னம், பூதுார், கீழவலம், அரையப்பாக்கம், பிலாப்பூர், படாளம், ஓணம்பாக்கம், எல்.என்.புரம், மேலக்கண்டை.அச்சிறுபாக்கம் திம்மாவரம், வெள்ளபுத்துார், சிறுநாவலுார், கிளியாநகர், வேடந்தாங்கல், மொறப்பாக்கம், எல்.எண்டத்துார், ஆத்துார், செண்டிவாக்கம், செம்பூண்டி, வெளியம்பாக்கம், கலியகுணம், அனந்தமங்கலம், ஒரத்தி, பொற்பரங்கரணை, தின்னலுார், கீழ்அத்திவாக்கம்.



உதவி எண்கள்


விவசாயிகள், தாங்கள் நெல் பயிரிட்டுள்ள பரப்பளவிற்கு, கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சிட்டா மற்றும் அடங்கல் பெற்று, கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில், தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யலாம்.
விவசாயிகள், கொள்முதல் நிலையத்தில் நடக்கும் முறைகேடுகள் பற்றி புகார் அளிக்கவும், குறைபாடுகளை தெரிவிக்கவும், கீழ்காணும் தொடர்பு எண்களை அழைக்கலாம்.முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் 044- - 2742 0071மேலாண்மை இயக்குனர் அலுவலகம் - இலவசம்1800 5993540கட்டுப்பாட்டு அறை044- - 2642 1633-, 2642 1665








      Dinamalar
      Follow us