/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்...விரைவில்!:நவம்பர் வரை செயல்பட நிர்வாகம் அனுமதி
/
தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்...விரைவில்!:நவம்பர் வரை செயல்பட நிர்வாகம் அனுமதி
தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்...விரைவில்!:நவம்பர் வரை செயல்பட நிர்வாகம் அனுமதி
தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள்...விரைவில்!:நவம்பர் வரை செயல்பட நிர்வாகம் அனுமதி
ADDED : ஆக 25, 2024 01:33 AM

செங்கல்பட்டு:சொர்ணவாரி பருவத்தில் பயிரிடப்பட்ட நெல் அறுவடைக்கு வந்துள்ளதால், செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், தற்காலிகமாக ஒன்பது இடங்களில் திறக்கப்பட உள்ளன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. மாவட்டத்தில், 1,86,257.5 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாவில், அதிகளவில் விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது. மற்ற பகுதியில், குறைந்தளவே விவசாயம் செய்யப்படுகிறது.
பாலாற்றங்கரை பகுதியில் ஆழ்துளை கிணறுகள், கிணற்று நீராதாரங்களை பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்யப்படுகிறது. சொர்ணவாரி பருவத்தில், 20,000 ஏக்கருக்கு மேல், நெல் நடவு செய்யப்பட்டு, அறுவடைக்கு தயாராக உள்ளன.
மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், கே.எம்.எஸ்., 2023- - 24 பருவத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கியது.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கவும், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்ய, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
விவசாயிகள் நலன் கருதி, சன்னரக நெல்லிற்கு குவிண்டாலுக்கு, 2,310 ரூபாயும், பொது ரக நெல்லிற்கு குவிண்டாலுக்கு 2,265 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும்போது, 17 சதவீதம் ஈரப்பதம் வரை உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். நெல் கொள்முதல் நிலையங்களில், எவ்வித முறைகேட்டிற்கும் இடம் அளிக்காத வகையில் பணிபுரிய வேண்டும்.
குறைபாடுகள் கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உடனுக்குடன், சம்பந்தப்பட்ட கிடங்கு அல்லது நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இது தொடர்பாக, முதுநிலை மண்டல மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, முதற்கட்டமாக ஒன்பது இடங்களில், நெல் கொள்முதல் நிலையம் அமைக்க, கலெக்டர் அருண்ராஜ், கடந்த 16ம் தேதி உத்தரவிட்டார்.
இதில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட உள்ளன. கொள்முதல் நிலையங்கள், வரும் நவ., மாதம் வரை செயல்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல் பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து சிட்டா அடங்கல் பெற்று, கொள்முதல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்யலாம். கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடந்தால், ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள்,
செங்கல்பட்டு.

