/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி பலி
/
தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : ஜன 01, 2025 12:14 AM
மறைமலைநகர், செங்கல்பட்டு அடுத்த பாலுார் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்த முனியாண்டி என்பவரது மகன் சிரஞ்சீவி,26.
ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் லாரி டிரைவராக பணிபுரிந்தார்.
இவருக்கும், இவரது மனைவிக்கும் கடந்த 25ம் தேதி சண்டை ஏற்பட்டு உள்ளது.
விரக்தியடைந்த சிரஞ்சீவி, உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கிருந்தோர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
70 சதவீத தீக்காயமடைந்த அவர், மேல் சிகிச்சைக்காக தாம்பரம் அடுத்த சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சையில் இருந்த சிரஞ்சீவி, நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

