/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.15 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டும் 7 ஆண்டாக செயல்படாத பிரசவ வார்டு
/
ரூ.15 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டும் 7 ஆண்டாக செயல்படாத பிரசவ வார்டு
ரூ.15 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டும் 7 ஆண்டாக செயல்படாத பிரசவ வார்டு
ரூ.15 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டும் 7 ஆண்டாக செயல்படாத பிரசவ வார்டு
ADDED : பிப் 05, 2024 07:18 AM

தாம்பரம் : தாம்பரம் மாநகராட்சி, 50வது வார்டு, ரங்கநாதபுரத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. ரங்கநாதபுரம், கடப்பேரி, கஸ்துாரி பாய் நகர், மேற்கு தாம்பரம், புலிகொரடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினசரி 300க்கும் மேற்பட்டோர், பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றனர்.
இங்கு, பொது, மகப்பேறு, குழந்தை நலன், கண், பல், தோல், முடநீக்கியல், மன நலம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதற்கான மருத்துவர்கள், வாரந்தோறும் சுழற்சி முறையில் வந்து செல்கின்றனர்.
பழமையான, இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, கர்ப்பிணியரும் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். பிரசவ நேரத்தில் குரோம்பேட்டை அல்லது எழும்பூர் மருத்துவமனைக்கு இவர்கள் அனுப்பப்படுகின்றனர். அதனால், ஏழை பெண்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாயினர்.
இந்த மருத்துவமனையிலேயே தாய் - சேய் மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 2016ல், 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டடம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டது.
இதில், 15 படுக்கை, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் பிரசவ வார்டு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அமைக்கப்படவில்லை.
வழக்கம்போல் கர்ப்பிணியர், பிரசவ நேரத்தில் குரோம்பேட்டை, எழும்பூருக்கு அனுப்பப்படுகின்றனர்.
இக்கட்டடத்தில் அமைக்கப்பட்ட சோலார் வசதியும் செயல்படவே இல்லை. மொட்டை மாடியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கட்டப்பட்டது.
அதுவும், செயல்படவில்லை. இம்மருத்துவமனையை மேம்படுத்த அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பிரசவ வார்டு அமைத்து, மருத்துவர் உள்ளிட்ட ஊழியர்களை நியமிக்கவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், சோலார் ஆகியவை இயங்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

