sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த கார் பயணியரை காப்பாற்றிய ஓட்டுனர்

/

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த கார் பயணியரை காப்பாற்றிய ஓட்டுனர்

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த கார் பயணியரை காப்பாற்றிய ஓட்டுனர்

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த கார் பயணியரை காப்பாற்றிய ஓட்டுனர்


ADDED : பிப் 16, 2025 02:42 AM

Google News

ADDED : பிப் 16, 2025 02:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில், நள்ளிரவில் தீப்பிடித்து கார் நாசமானது. ஓட்டுனர் சமயோஜிதத்தால், காருக்குள் இருந்த பயணியர் உயிர் தப்பினர்.

விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா, சின்னகொலுவாரி, நீலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன், 32; கார் ஓட்டுனர்.

இவர், விழுப்புரத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், 34, என்பவருக்குச் சொந்தமான சுசுஹி பிரஸ்சா காரில், ஒரு பெண் உட்பட நான்கு பயணியரை, நேற்று முன்தினம் கும்பகோணத்தில் ஏற்றிக் கொண்டு, சென்னை, கீழ்க்கட்டளைக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது, இரவு 10:40 மணியளவில், கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி., சாலையில், ஆலடிபட்டியான் காபி கடை அருகே வரும் போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.

உடனே ஆனந்தன், சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, பயணியரை பத்திரமாக கீழே இறக்கினார்.

அப்போது, தீயின் வேகம் அதிகரித்து, கார் முழுதும் தீ பரவியது.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஆனந்தன் கூறிய தகவல்படி, கூடுவாஞ்சேரி சிறப்பு எஸ்.ஐ., கிருஷ்ணவேணி சம்பவ இடம் வந்து, மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவத்தில், கார் முற்றிலும் எரிந்து நாசமானது. பயணியரின் மூன்று மொபைல் போன்கள், 10,000 ரூபாய் பணம் மற்றும் உடைமைகள் எரிந்து சாம்பலாகின.

டிரைவரின் சாமர்த்தியத்தால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து, பொத்தேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us