sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

நடுரோட்டில் நள்ளிரவு மது விருந்து தட்டிக்கேட்ட ஓட்டுனரின் கார் சூறை

/

நடுரோட்டில் நள்ளிரவு மது விருந்து தட்டிக்கேட்ட ஓட்டுனரின் கார் சூறை

நடுரோட்டில் நள்ளிரவு மது விருந்து தட்டிக்கேட்ட ஓட்டுனரின் கார் சூறை

நடுரோட்டில் நள்ளிரவு மது விருந்து தட்டிக்கேட்ட ஓட்டுனரின் கார் சூறை


ADDED : ஜன 30, 2024 03:42 AM

Google News

ADDED : ஜன 30, 2024 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தி.நகர், தணிகாசலம் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரேயன்க். இவரது வீட்டில், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், 24, என்பவர் கார் ஓட்டுனராக பணிபுரிகிறார்.

கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், நேற்று முன்தினம் நடந்த ஸ்ரேயன்க் குடும்ப நிகழ்ச்சிக்கு அனைவரும் காரில் சென்றனர்.

நிகழ்ச்சி முடிந்து, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை பகுதியில் வசிக்கும் உறவினரின் மகளை இறக்கி விட்டனர். பின் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல பிரகாஷ் காரை எடுத்தார்.

அப்போது, சாலையின் நடுவில் அமர்ந்து, ஏழு பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். ஓட்டுனர் பிரகாஷ் 'ஹாரன்' அடித்து வழிவிடும்படி கேட்டுள்ளார்.

அதீத மதுபோதையில் இருந்த கும்பல், திடீரென தகராறில் ஈடுபட்டனர். பின், பிரகாஷ் காரை இயக்கியபோது, கார் கண்ணாடியை உடைத்து பிரகாஷை தாக்கினர்.

இதில், அவர் காயமடைந்தார். தேனாம்பேட்டை போலீசார் விரைந்து வந்தபோது, ஐந்து பேர் தப்பினர்; இருவர் சிக்கினர்.

அவர்களை கைது செய்து நடத்திய விசாரணையில், தேனாம்பேட்டை, ஆஸ்டின் நகரை சேர்ந்த ராஜேஷ், 22, பைகிராப்ட்ஸ் நகரை சேர்ந்த துணிக்கடை ஊழியர் சந்திரன், 24, என தெரிந்தது. மற்ற ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us