/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெல்லிக்குப்பத்தில் மின்சார அலுவலகம் நீண்ட நாள் பிரச்னைக்கு விமோசனம்
/
நெல்லிக்குப்பத்தில் மின்சார அலுவலகம் நீண்ட நாள் பிரச்னைக்கு விமோசனம்
நெல்லிக்குப்பத்தில் மின்சார அலுவலகம் நீண்ட நாள் பிரச்னைக்கு விமோசனம்
நெல்லிக்குப்பத்தில் மின்சார அலுவலகம் நீண்ட நாள் பிரச்னைக்கு விமோசனம்
ADDED : மே 02, 2025 01:37 AM
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய நெல்லிக்குப்பம் ஊராட்சியில் நெல்லிக்குப்பம், அகரம், அம்மாப்பேட்டை ஆகிய மூன்று கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களில் மருத்துவ கல்லுாரியுடன் மருத்துவமனை, அடுக்குமாடி குடியிருப்புகள், வங்கிகள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், பெட்ரோல் பங்க், கோவில்கள் உள்ளன.
அம்மாப்பேட்டை கிராமத்தில், 110 கிலோ வாட் திறன் கொண்ட மின் வழங்கல் நிலையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இந்த மின் நிலையத்தில் இருந்து கொண்டங்கி, கீழூர் என, சுற்றுவட்டார 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், இந்த நெல்லிக்குப்பம் மின் நிலையத்திற்கு, மின் கட்டணம் வசூல் மையம் உருவாக்கப்படவில்லை.
இதன் காரணமாக, நெல்லிக்குப்பம் மின் நிலையத்தில் மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்பு பெறும் விண்ணப்பங்களை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள இயலவில்லை.
நெல்லிக்குப்பம் சுற்றுவட்டார பொதுமக்கள் புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கவும், மின் கட்டணம் செலுத்தவும், 10 முதல் 15 கி.மீ., துாரத்தில் உள்ள திருப்போரூர் மின்வாரிய அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், பொதுமக்களுக்கு நேர விரயமும், பண விரயமும், வீண் அலைச்சலும் ஏற்பட்டு அவதிப்பட்டனர்.
எனவே, நெல்லிக்குப்பம் மின் வழங்கல் நிலையத்தில் புதிய இளநிலை பொறியாளர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்றும், மின் கட்டணம் செலுத்தும் மையம் ஏற்படுத்த வேண்டுமென்றும், கோரிக்கை எழுந்தது.
இந்த கோரிக்கை தொடர்பாக, நம் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது.
இதையடுத்து, நெல்லிக்குப்பத்தில் மின்சாரம் அலுவலகம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தற்போது முதற்கட்டமாக, சமுதாய நலக்கூடத்தில் செயல்படுத்தவும், பிறகு இடம் தேர்வு செய்து சொந்த கட்டடம் கட்டவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

