sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கடலில் மூழ்கிய சிறுமி மாயம்

/

கடலில் மூழ்கிய சிறுமி மாயம்

கடலில் மூழ்கிய சிறுமி மாயம்

கடலில் மூழ்கிய சிறுமி மாயம்


ADDED : ஜன 17, 2025 09:52 PM

Google News

ADDED : ஜன 17, 2025 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூணாம்பேடு:சூணாம்பேடு அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட சேம்புலிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாபு இவரது மனைவி கலையரசி.

தம்பதிக்கு கிருத்திகா, 16, ஹாசினி, 13 என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று மாலை கலையரசி தன் குடும்பத்தினருடன் கடப்பாக்கம் பகுதியில் உள்ள கடற்கரைக்கு குளிக்கச் சென்றனர்.

முகத்துவாரம் பகுதியில் குளித்துக்கொண்டு இருந்தபோது, கிருத்திகா, ஹாசினி ஆகிய இருவரும் கடலில் இழுத்துச் செல்லப்பட்டனர்.

அருகே இருந்தவர்கள் உடனடியாக கடலில் இறங்கி கிருத்திகாவை மீட்டனர்.

ஹாசினி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டதால், குடும்பத்தினர் சூணாம்பேடு காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடப்பாக்கம் பகுதி மீனவர்களுடன் இணைந்து படகு மூலமாக கடலுக்குள் சென்று மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us