sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இருளில் மூழ்கிய நெடுஞ்சாலை சோத்துப்பாக்கத்தில் அவஸ்தை

/

இருளில் மூழ்கிய நெடுஞ்சாலை சோத்துப்பாக்கத்தில் அவஸ்தை

இருளில் மூழ்கிய நெடுஞ்சாலை சோத்துப்பாக்கத்தில் அவஸ்தை

இருளில் மூழ்கிய நெடுஞ்சாலை சோத்துப்பாக்கத்தில் அவஸ்தை


ADDED : மார் 05, 2024 03:46 AM

Google News

ADDED : மார் 05, 2024 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார் : சோத்துப்பாக்கம் பகுதியில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால், சாலை பகுதி இருளில் மூழ்கியுள்ளது.

மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதி, வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் அதிகமுள்ளதால், சில ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.

இரவிலும் பகல் போல ஒளிர்ந்த உயர் கோபுர மின் விளக்கால், கனரக வாகன ஓட்டுனர்களும், அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளும், அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்களும், இரவில் அச்சமின்றி சென்று வந்தனர்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், இந்த மின் விளக்கு பழுதடைந்தது. இதில், சோத்துப்பாக்கம் பயணியர் நிழற்குடை, மேல்மருவத்துார் உயர்மட்ட பாலத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள நான்கு உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.

லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கு, உபயோகமின்றி வீணாகி வருகிறது. இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையினருக்கு, சோத்துப்பாக்கம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக, புகார் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, உயர் கோபுர மின் விளக்கை சீரமைக்க, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us