sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லையில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம் துவக்கம்

/

மாமல்லையில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம் துவக்கம்

மாமல்லையில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம் துவக்கம்

மாமல்லையில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம் துவக்கம்


ADDED : நவ 02, 2024 01:17 AM

Google News

ADDED : நவ 02, 2024 01:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், 10 நாட்கள் நடத்தப்படும் பூதத்தாழ்வார் அவதார உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது.

முதலாழ்வார்களில் ஒருவர் பூதத்தாழ்வார். மாமல்லபுரத்தில் உள்ள நந்தவன குருக்கத்தி மலரில், ஐப்பசி மாத அவிட்டம் நட்சத்திர நாளில், அவர் அவதரித்தார். இங்கு, ஸ்தலசயன பெருமாள் கோவிலில், தனி சன்னிதியில் வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவிலில் 10 நாட்கள் நடத்தப்படும் அவரது அவதார உற்சவம், நேற்று முன்தினம் துவங்கியது.

அன்று பிற்பகல் திருமஞ்சனம், நாலாயிர திவ்விய பிரபந்தம், திருப்பாவை சேவைகள் கண்டு, தாமரைமலர் வாகனத்தில் வீதியுலா சென்றார்.

கோவிலை அடைந்து, திருவாய்மொழி சேவை கண்டார். தினசரி திருமஞ்சனம், வீதியுலா என, வரும் 9ம் தேதி வரை தொடர்ந்து, உற்சவம் நடக்கிறது.

முக்கிய உற்சவமாக, வரும் 8ம் தேதி காலை, திருத்தேரில் உலா செல்கிறார். அவதார ஜெயந்தி நாளான, 9ம் தேதி மாலை, அவதார ஸ்தல வளாகத்தில், திருமஞ்சனத்துடன் உற்சவம் காண்கிறார்.






      Dinamalar
      Follow us