sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வீண்

/

வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வீண்

வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வீண்

வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வீண்


ADDED : மே 08, 2025 02:02 AM

Google News

ADDED : மே 08, 2025 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கொண்டு வந்த இரும்பு கம்பிகள், மண்ணில் மட்கி வீணாகி வருகின்றன.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, 59 ஊராட்சிகள் உள்ளன. அதில், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு கட்டும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போது, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில் 650 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

வீடு கட்டுவதற்கு பணி ஆணை பெற்ற பயனாளிகள் முதற்கட்ட பணியாக, காலங்குழிகள் எடுத்து, அடித்தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு வழங்குவதற்காக, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், இரும்பு கம்பிகள் கொண்டு வரப்பட்டு, அப்பகுதியில் உள்ள மரத்தடி மற்றும் காலியிடத்தில் உரிய பாதுகாப்பின்றி, மண் தரையில் வைக்கப்பட்டு உள்ளன.

இதனால் இரும்புக் கம்பிகள், மழை மற்றும் வெயிலில் காய்ந்து, துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

எனவே, வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், காலியாக உள்ள கட்டடத்தில் இவற்றை பாதுகாப்பாக வைத்து, வழங்க வேண்டும் என, பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us