sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் மறு சீரமைப்புக்கு பின் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 3,068

/

செங்கையில் மறு சீரமைப்புக்கு பின் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 3,068

செங்கையில் மறு சீரமைப்புக்கு பின் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 3,068

செங்கையில் மறு சீரமைப்புக்கு பின் ஓட்டுச்சாவடி எண்ணிக்கை 3,068


ADDED : செப் 30, 2025 12:26 AM

Google News

ADDED : செப் 30, 2025 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு;செங்கல்பட்டு மாவட்டத்தில், மறு சீரமைப்புக்குப் பின், ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை 3,068 ஆக உயர்ந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி மறு சீரமைப்பு தொடர்பாக, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரான சினேகா தலைமையில், மறைமலை நகர் நகராட்சி கூட்ட அரங்கில், சமீபத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், சப் - கலெக்டர் மாலதி ஹெலன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், இந்தாண்டு ஜன., 6ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், 27.47 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 13.57 லட்சம் பேர் ஆண் வாக்காளர்கள். 13.89 லட்சம் பேர் பெண் வாக்காளர்கள். 481 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏழு சட்டசபை தொகுதிகளில், 2,826 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதில், 1,200க்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்ட ஓட்டுச்சாவடிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 242 ஓட்டுச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

இதனால் தற்போது, ஓட்டுச்சாவடிகளின் எண்ணிக்கை 3,068 ஆக உயர்ந்துள்ளதாக, மாவட்ட தேர்தல் அதிகாரி சினேகா தெரிவித்துள்ளார்.

கருத்து கூறலாம் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஓட்டுச்சாவடிகளின் பட்டியல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஏதேனும் கருத்துகளை தெரிவிக்க விரும்பினால், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் அல்லது தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலரிடம், எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.








      Dinamalar
      Follow us