/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சுங்கச்சாவடி கண்ணாடி உடைத்தவர் கைது
/
சுங்கச்சாவடி கண்ணாடி உடைத்தவர் கைது
ADDED : செப் 21, 2024 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலைநகர் :செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், கடந்த 16ம் தேதி மாலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில், ஜவாஹிருல்லா தலைமையில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என, ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, திருச்சி -- சென்னை மார்க்கத்தில் உள்ள 4, 5, 6 ஆகிய சுங்கச்சாவடி பூத் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வந்தனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளரான, ஆவடியை சேர்ந்த மகத்கனி, 32, என்பவரை கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.