/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை பெயர் பலகையில் துாரம் அறிவிப்பின்றி அவதி
/
சாலை பெயர் பலகையில் துாரம் அறிவிப்பின்றி அவதி
ADDED : அக் 06, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி ருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையில், இ.சி.ஆர்., நெம்மேலி, கல்பாக்கம் உள்ளிட்ட இடங்களைக் குறிக்கும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
அவற்றில், ஊர்களின் பெயர் மட்டுமே உள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட ஊர்கள் எத்தனை கி.மீ., என, துாரம் குறிப்பிடப்படவில்லை. இது, வாகன ஓட்டிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, நெடுஞ்சாலையில் வைத்துள்ள பெயர் பலகைகளில், அந்த ஊர்களின் தொலைவையும் குறிப்பிட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.விஜயன், திருப்போரூர்.