/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குறைதீர்வு கூட்டத்தில் 358 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர்வு கூட்டத்தில் 358 மனுக்கள் ஏற்பு
ADDED : அக் 06, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு, செங்கல்பட்டில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 358 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன் காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் குமார் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர், வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 358 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் சினேகா உத்தரவிட்டார்.