sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையோரம் வளர்ந்துள்ள செடிகள் அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

/

சாலையோரம் வளர்ந்துள்ள செடிகள் அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையோரம் வளர்ந்துள்ள செடிகள் அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையோரம் வளர்ந்துள்ள செடிகள் அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை


ADDED : அக் 06, 2025 11:33 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்,கல்பட்டு கிராமத்தில், சாலையோரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில், 2.8 கி.மீ., தார்ச்சாலை உள்ளது.

இந்த சாலையை கல்பட்டு, வேலுார், பனையடிவாக்கம், தென்னேரிப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர்.

சாலையில் தினமும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த சாலை ஓரத்தில், அதிக அளவில் செடிகள் வளர்ந்து உள்ளதால், கனரக வாகனங்கள் வரும் போது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், சாலையோரம் ஒதுங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மேலும், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் முதியவர்கள் மற்றும் பெண்கள், இதனால் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

எனவே, சாலையோரம் உள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us