sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

விபத்தில் வாலிபர் பலி உறவினர்கள் மறியல்

/

விபத்தில் வாலிபர் பலி உறவினர்கள் மறியல்

விபத்தில் வாலிபர் பலி உறவினர்கள் மறியல்

விபத்தில் வாலிபர் பலி உறவினர்கள் மறியல்


ADDED : ஜன 30, 2024 04:32 AM

Google News

ADDED : ஜன 30, 2024 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தரமணி : சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 28; சவுண்ட் சர்வீஸ் நடத்தி வந்தார். நேற்று முன்தினம், பெரும்பாக்கத்தில் உள்ள உறவினர் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நள்ளிரவு வீடு நோக்கி இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

ஓ.எம்.ஆர்., கந்தன்சாவடி அருகில் சென்ற போது, மெட்ரோ பணிக்காக நிறுத்தியிருந்த லாரியின் பின்பகுதியில் மோதினார். இதில், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.

எச்சரிக்கை விளக்கு எரிய வைக்காமல், லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தி வைத்திருந்தனர். விபத்திற்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி, விக்னேஷின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலின்படி வந்த தரமணி போலீசார் பேச்சு நடத்தி, அவர்களை களையச் செய்தனர். விபத்து தொடர்பாக, கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us