sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருத்தேர் விமரிசை

/

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருத்தேர் விமரிசை

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருத்தேர் விமரிசை

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் திருத்தேர் விமரிசை


ADDED : ஏப் 21, 2025 01:44 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த திருமலை வையாவூரில் உள்ள அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், சித்திரை பிரமோற்சவ திருத்தேர் விமரிசையாக நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், திருமலை வையாவூரில், மிக பழமையான அலர்மேல் மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது.

இங்கு, ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவ விழா, விமரிசையாக நடைபெறும்.

அதன்படி இந்தாண்டு, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பிரமோற்சவ விழா துவங்கியது.

பின், தினமும் அம்ச வாகனம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சேஷா வாகனம், கருட சேவை உள்ளிட்டவற்றில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

நேற்று முன்தினம் இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மலையில் இருந்து பிரசன்ன வெங்கடேச பெருமாள் கீழே கொண்டுவரப்பட்டார்.

பின், பாரம்பரிய முறைப்படி, வண்ண விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.

நேற்று காலை வரை, திருமலை வையாவூரின் முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் வலம் வந்தது.

வீடுதோறும் பெண்கள் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

இன்று, போர்வை களைதல் தீர்த்தவாரி மற்றும் புஷ்ப பல்லக்கு நடைபெறுகிறது.






      Dinamalar
      Follow us