/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அபாய நிலையிலிருந்த மின்மாற்றி வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பு
/
அபாய நிலையிலிருந்த மின்மாற்றி வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பு
அபாய நிலையிலிருந்த மின்மாற்றி வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பு
அபாய நிலையிலிருந்த மின்மாற்றி வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பு
ADDED : ஜூலை 10, 2025 02:05 AM

செய்யூர்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, செய்யூரில் சேதமடைந்த கம்பத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்மாற்றி, வேறு இடத்தில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
செய்யூர் பகுதியில் தண்ணீர்பந்தல் கிராமத்திற்குச் செல்லும் சாலை ஓரத்தில், நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், தேவராஜபுரம் பகுதி குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின் விநியோகம் செய்ய, மின்மாற்றி அமைக்கப்பட்டு இருந்தது.
மின்மாற்றியை தாங்கிய மின்கம்பங்கள் பழுதடைந்து, சிமென்ட் பூச்சு உதிர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிந்தன.
பலத்த காற்று வீசினால், மின்கம்பம் முறிந்து மின்மாற்றி மீது சாய்ந்து மின் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
இதன் எதிரொலியாக, மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படும் நிலையில் இருந்த மின்மாற்றியை, சற்று தொலைவில் வேறு இடத்திற்கு, புது கம்பங்கள் நட்டு மாற்றி அமைத்து உள்ளனர்.