sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

3 கி.மீ., துாரத்திலுள்ள ரேஷன் கடை அருங்குன்றம் கிராமத்தினர் தவிப்பு

/

3 கி.மீ., துாரத்திலுள்ள ரேஷன் கடை அருங்குன்றம் கிராமத்தினர் தவிப்பு

3 கி.மீ., துாரத்திலுள்ள ரேஷன் கடை அருங்குன்றம் கிராமத்தினர் தவிப்பு

3 கி.மீ., துாரத்திலுள்ள ரேஷன் கடை அருங்குன்றம் கிராமத்தினர் தவிப்பு


ADDED : ஏப் 23, 2025 07:49 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 07:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:அருங்குன்றம் கிராமத்தில் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ரேஷன் வாங்க 3 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டியுள்ளதால் அவதிப்படுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய அருங்குன்றம் ஊராட்சியில், இருளர் மற்றும் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இவர்கள், 3 கி.மீ., துாரத்தில் பெருமாள்கோவில் அருகே உள்ள ரேஷன் கடைக்குச் சென்று, உணவுப் பொருட்களை வாங்கி, தலையில் சுமந்து செல்கின்றனர்.

குறிப்பாக, இருளர் இன மக்கள் கூலி வேலைக்குச் செல்வதால், பள்ளி செல்லும் இவர்களது குழந்தைகள் விடுப்பு எடுத்து, 3 கி.மீ., துாரம் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

மேலும் 'சர்வர்' பிரச்னை, பொருட்கள் இருப்பு குறைவு போன்ற நேரங்களில், ரேஷன் கடைக்கும் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள், முதியோர் உட்பட அனைவரும் சிரமப்படுகின்றனர்.

இந்த அவல நிலையை போக்க, நடமாடும் ரேஷன் கடை அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்து வருகின்றனர். ஆனால், இதுவரை இவர்களது துயரம் தீரவில்லை.

எனவே, மேற்கண்ட பகுதியில் நடமாடும் ரேஷன் கடை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us