sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அடுத்தடுத்த வீடுகளில் ஆத்துாரில் திருட்டு

/

அடுத்தடுத்த வீடுகளில் ஆத்துாரில் திருட்டு

அடுத்தடுத்த வீடுகளில் ஆத்துாரில் திருட்டு

அடுத்தடுத்த வீடுகளில் ஆத்துாரில் திருட்டு


ADDED : பிப் 06, 2025 10:30 PM

Google News

ADDED : பிப் 06, 2025 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் மதுராகுப்பம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக்,55.

சென்னை, அடையாறு இந்திரா நகரில், வாடகை வீட்டில் தங்கி டெய்லர் கடை நடத்தி வருகிறார்.

வார இறுதி நாட்களில் மட்டும், மதுராகுப்பத்திற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

நேற்று காலை அக்கம்பக்கத்தினர் பார்த்த போது, கார்த்திக் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

தகவலின்படி, கார்த்திக் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த வெள்ளி குத்து விளக்கு மற்றும் கால் சவரன் தங்க மோதிரம் திருடு போனது தெரிந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் விசாரணையில், இதே கிராமத்தில் அஞ்சாலாட்சி,60, என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், உள்ளே எந்த விலை உயர்ந்த பொருட்களும் இல்லாததால், வீட்டில் இருந்த பொருட்களை கலைத்து விட்டு சென்றது தெரிந்தது.

அதேபோல, ஆத்துார் அடுத்த வடபாதி, அம்பேத்கர் தெருவில் மாலதி,38, என்பவரின் வீட்டு பூட்டை உடைத்து, 4 சவரன் தங்க நகை மற்றும் 1,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.

அடுத்தடுத்த பகுதிகளில் வீடுகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றது, கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us