ADDED : அக் 26, 2024 07:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த கிணார் கிராமத்தைச் சேர்ந்தவர் இயேசுபாதம், 57. இவர், மதுராந்தகம் -- திருக்கழுக்குன்றம் மாநில நெடுஞ்சாலையில், அரையப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, வாகனம் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.