/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் வரும் 21ல் திருக்குறள் வினாடி - வினா
/
செங்கையில் வரும் 21ல் திருக்குறள் வினாடி - வினா
ADDED : டிச 17, 2024 09:35 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான முதல் நிலை திருக்குறள் வினாடி - வினா, வரும் 21ம் தேதி நடக்கிறது.
கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான, திருக்குறள் முதல் நிலை வினாடி - வினா போட்டி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக, மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், வரும் 21ம் தேதி பிற்பகல் 2:00 மணிக்கு நடக்கிறது.
இதனால், போட்டியாளர்கள் பிற்பகல் 1:00 மணிக்கு அரங்கிற்கு வர வேண்டும். இறுதி போட்டி, விருதுநகர் மாவட்டத்தில், 28ம் தேதி நடக்கிறது. மேலும் போட்டியாளர்கள் முன்பதிவு செய்ய, 82207 38038 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.