/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்பூர் கொலை வழக்கு 5 பேர் சரண்
/
திருப்பூர் கொலை வழக்கு 5 பேர் சரண்
ADDED : ஜன 05, 2024 11:15 PM
செங்கல்பட்டு:திருப்பூர் வெள்ளியங்காடு திரு.வி.க., நகரைச் சேர்ந்த பாலமுருகன், 47, என்பவரை, கடந்த 3ம் தேதி, மர்ம நபர்கள் கொலை செய்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து, அவரின் மனைவி மீனா அளித்த புகாரை அடுத்து, திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இக்கொலை வழக்கில் தேடப்படுவதாக கருதி, திருப்பூரைச் சேர்ந்த முருகன் என்கிற நொண்டி முருகன், 56, மணிகண்டன், 23, சரவணன், 26, கதிர்வேல், 21, மதுரை ஹரி, 25, ஆகியோர், செங்கல்பட்டு முதலாவது நீதிமன்றத்தில், நீதிபதி ரீனா முன், நேற்று சரணடைந்தனர்.
இதையடுத்து, ஐந்து பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின், ஐந்து பேரையும், செங்கல்பட்டு மாவட்ட சிறையில் போலீசார் அடைத்தனர்.