/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
எலப்பாக்கம் கிராமத்தில் இன்று சித்திரை கிருத்திகை பால்காவடி
/
எலப்பாக்கம் கிராமத்தில் இன்று சித்திரை கிருத்திகை பால்காவடி
எலப்பாக்கம் கிராமத்தில் இன்று சித்திரை கிருத்திகை பால்காவடி
எலப்பாக்கம் கிராமத்தில் இன்று சித்திரை கிருத்திகை பால்காவடி
ADDED : ஏப் 29, 2025 12:09 AM

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள சின்மய விநாயகர், பாலமுருகன் கோவிலில், 65-வது ஆண்டு சித்திரை கிருத்திகை பால் காவடி பெருவிழா, இன்று நடைபெறுகிறது.
இதையொட்டி நேற்று, மங்கல இசையுடன் பரணி விழா நடந்தது.
பின், இரவு 10:00 மணியளவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் திருக்கோவிலில் வலம் வரும் நிகழ்வு நடைபெற்றது.
முக்கிய நிகழ்வாக சித்திரைக் கிருத்திகை பால் காவடி திருவிழா, இன்று அதிகாலை 5:00 மணிக்கு, மங்கல இசையுடன், மூலவர் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் துவங்குகிறது.
காலை 7:00 மணிக்கு சேவல் கொடியேற்றுதலுடன் விழா தொடங்கி, மூலவர் சந்நிதியில் உள்ள சின்மய விநாயகர், பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறும்.
பின், 7:30 மணிக்கு மேல், எலப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, விரதமிருந்து காப்பு அணிந்த பக்தர்கள் பால் காவடி, வேல் காவடி, பறவை காவடி, பால்குடம் எடுத்தல் என, மேளதாளம் முழங்க, முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவர்.
பின், 11:00 மணியளவில் அன்னதானம் வழங்கப்படும்.
நண்பகல் 1:00 மணிக்கு மும்மூர்த்திகளுக்கு மஹா சிறப்பு அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு மகாதீப ஆராதனையும் நடைபெறும்.
இரவு, 2:00 மணிக்கு மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில், சின்மய விநாயகர் மற்றும் பாலமுருகன் முக்கிய வீதிகளில் வலம் வருவர்.

