sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கூட்டுறவு வங்கியில் டிராக்டர் விவசாய பணிக்கு ஒப்படைப்பு

/

கூட்டுறவு வங்கியில் டிராக்டர் விவசாய பணிக்கு ஒப்படைப்பு

கூட்டுறவு வங்கியில் டிராக்டர் விவசாய பணிக்கு ஒப்படைப்பு

கூட்டுறவு வங்கியில் டிராக்டர் விவசாய பணிக்கு ஒப்படைப்பு


ADDED : ஜன 29, 2025 07:03 PM

Google News

ADDED : ஜன 29, 2025 07:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எல்.எண்டத்துார் ஊராட்சியில், கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.

இப்பகுதியில், விவசாயமே மிக முக்கிய தொழில்.

விவசாயிகள் உழவு பணிக்காக, எல்.எண்டத்துார் கூட்டுறவு வங்கி கிளையில், சொந்தமாக டிராக்டர் வாகனம் வேண்டி, கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.

அதன்படி நேற்று, விவசாயிகள் குறைந்த கட்டணத்தில் பயன்பெறும் வகையில், எல்.எண்டத்துார் கூட்டுறவு வங்கி கிளைக்கு, புதிய டிராக்டர் வாகனம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இந்த வாகனத்தை, விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ராமாபுரம், வேடந்தாங்கல், வெள்ளப்புத்துார், எல்.எண்டத்துார் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், இந்த டிராக்டரால் பயன்பெறுவர்.

விவசாய பணிக்கு வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் விவசாயிகள், வேளாண் உழவன் செயலியில் பதிவு செய்து பயன் பெறலாம்.






      Dinamalar
      Follow us