sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சூணாம்பேடு பஜாரில் வணிக வளாகம் அமைக்க வியாபாரிகள் வலியுறுத்தல்

/

சூணாம்பேடு பஜாரில் வணிக வளாகம் அமைக்க வியாபாரிகள் வலியுறுத்தல்

சூணாம்பேடு பஜாரில் வணிக வளாகம் அமைக்க வியாபாரிகள் வலியுறுத்தல்

சூணாம்பேடு பஜாரில் வணிக வளாகம் அமைக்க வியாபாரிகள் வலியுறுத்தல்


ADDED : டிச 28, 2024 08:39 PM

Google News

ADDED : டிச 28, 2024 08:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சியில் பஜார் பகுதியில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகம் அருகே ஊராட்சிக்கு சொந்தமான 18 கடைகள் இருந்தன.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், பராமரிப்பு இன்றி பழுதடைந்து இருந்தது, மேலும் கடைகள் சாலை ஓரத்தில் இருப்பதால் பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து பழைய கடைகளை அகற்றி விட்டு புதிய கடைகள் அமைக்க ஊராட்சி மன்றம் சார்பாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடைகள் காலி செய்யப்பட்டு, கடந்த ஆண்டு டிச., 11ம் தேதி இடித்து அகற்றப்பட்டது.

தரை தளம் மற்றும் முதல் தளம் என இரண்டு தளங்களுடன் கூடிய, புதிய வணிக வளாக கட்டம் அமைப்பதற்கான முன்மொழிவு தயார் செய்யப்பட்டு, மாவட்ட நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்ட நிலையில் ,தற்போது வரை புதிய வணிக வளாக கட்டடம் அமைக்கப்படாமல் உள்ளது.

இதனால் பழைய 18 கடைகளில் வாடகைக்கு இருந்தவர்கள், புதிய கடைகள் வாடகைக்கு கிடைக்காமலும், தனிநபர்களிடம் அதிக வாடகை செலுத்தியும் கடைகள் நடத்தி வருகின்றனர்.

ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள், சூணாம்பேடு பஜார் பகுதியில் ஊராட்சி சார்பாக புதிய வணிக வளாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us