sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மழையால் போக்குவரத்து நெரிசல்

/

மழையால் போக்குவரத்து நெரிசல்

மழையால் போக்குவரத்து நெரிசல்

மழையால் போக்குவரத்து நெரிசல்


ADDED : ஆக 31, 2025 03:36 AM

Google News

ADDED : ஆக 31, 2025 03:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:மழையால், தாம்பரம் - சோமங்கலம் சாலை சகதியாக மாறி, கன்னடபாளையம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாம்பரம் - சோமங்கலம் சாலை, தாம்பரம் ஜி.எஸ்.டி., சாலை, சென்னை புறவழிச்சாலை மற்றும் வெளிவட்ட சாலையை இணைக்கிறது.

இதில், தாம்பரம் அருகே கன்னடபாளையம் முதல் வரதராஜபுரம் வரை 2 கி.மீ., சாலையில், மண் நெகிழ்வு தன்மையை இழந்ததால், சாலை உள்வாங்கி அடிக்கடி பள்ளம் ஏற்படுகிறது.

இதை தடுக்க, இந்த பகுதியில் சாலையை அகலப்படுத்தி, தரைமட்டத்திற்கு கீழ் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி, இரு ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த பணிகளால், சாலை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை, தாம்பரம் சுற்றுப்புறத்தில் கன மழை பெய்தது. இதனால், சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறியதால், வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டு, கடும் நெரிசல் ஏற்பட்டது.

வாகனங்கள், வரதராஜபுரத்தில் இருந்து கன்னடபாளையம் பகுதியை கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆனது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us