/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இயற்கை விவசாய தொழில்நுட்பம் வேளாண் நிலையத்தில் பயிற்சி
/
இயற்கை விவசாய தொழில்நுட்பம் வேளாண் நிலையத்தில் பயிற்சி
இயற்கை விவசாய தொழில்நுட்பம் வேளாண் நிலையத்தில் பயிற்சி
இயற்கை விவசாய தொழில்நுட்பம் வேளாண் நிலையத்தில் பயிற்சி
ADDED : மார் 14, 2024 10:37 PM

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து, இரண்டு நாட்கள் பயிற்சி நடைபெற்றது.
காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் சித்தார்த் தலைமையில், உதவி பேராசிரியர் காயத்ரி ஏற்பாட்டில் நடந்த பயிற்சியில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
இந்த பயிற்சியில், விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் வாயிலாக மண் மேம்பாடு, உள்ளீடு உற்பத்தி, பாரம்பரிய பயிர் வகைகள் உள்ளிட்டவை குறித்து துறை சார்ந்த வல்லுனர்கள் விளக்கினர்.
செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த இயற்கை விவசாயி ஜெயச்சந்திரன், தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து, வேளாண் அறிவியல் நிலையத்தில் உள்ள இயற்கை பண்ணையை, விவசாயிகள் பார்வையிட்டனர்.

