/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் இன்ஸ்.,கள் இடமாற்றம்
/
செங்கையில் இன்ஸ்.,கள் இடமாற்றம்
ADDED : அக் 02, 2024 08:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து, வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ராக் கர்க், உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்ட காவல் அலுவலகத்தில், எஸ்.பி., தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் பணிபுரிந்து வருகிறார். இவர், காஞ்சிபுரம் மாவட்டம், பொன்னேரிக்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.
மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் படாளம் போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.