sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 29, 2025 ,புரட்டாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சொத்து வரி வசூலிக்க மறுப்பு திருநங்கையர் போராட்டம்

/

சொத்து வரி வசூலிக்க மறுப்பு திருநங்கையர் போராட்டம்

சொத்து வரி வசூலிக்க மறுப்பு திருநங்கையர் போராட்டம்

சொத்து வரி வசூலிக்க மறுப்பு திருநங்கையர் போராட்டம்


ADDED : செப் 26, 2025 03:04 AM

Google News

ADDED : செப் 26, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:ஒழலுாரில், இலவச பட்டாவுக்கு சொத்து வரி வசூலித்து ரசீது வழங்க மறுத்த ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, கலெக்டர் அலுவலகம் பகுதியில் நேற்று, திருநங்கையர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, பெருங்களத்துார் பகுதியில், திருநங்கையர் 37 பேர், சொந்த வீடு இல்லாமல், வாடகை வீடுகளில் வசித்து வந்தனர். இவர்களுக்கு, செங்கல்பட்டு அடுத்த ஒழலுார் ஊராட்சியில், தலா 2 சென்ட் இலவச வீட்டுமனையை, வருவாய்த்துறை ஒதுக்கீடு செய்தது.

அதன் பின், பல்லாவரத்தில் நடந்த அரசு விழாவில் இவர்களுக்கு, இலவச வீட்டுமனை பட்டாவை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து, ஒழலுார் ஊராட்சி மன்ற தலைவரை, திருநங்கையர் சந்தித்து, வீட்டுமனை பட்டாவுக்கு சொத்து வரி வசூல் செய்து, ரசீது தரும்படி கேட்டுள்ளனர்.

இதற்கு, ஊராட்சி மன்ற தலைவர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் பகுதியில் நேற்று, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த தாசில்தார் ஆறுமுகம், காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், மீனாட்சி, செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர், அவர்களிடம் பேச்சு நடத்தினர்.

அதன் பின், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, திருநங்கையரிடம் பேச்சு நடத்தி, ஆறு மாதத்திற்குள் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us