sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பள்ளி வளாகத்தில் அராஜகம் வாலிபர்கள் இருவர் கைது

/

பள்ளி வளாகத்தில் அராஜகம் வாலிபர்கள் இருவர் கைது

பள்ளி வளாகத்தில் அராஜகம் வாலிபர்கள் இருவர் கைது

பள்ளி வளாகத்தில் அராஜகம் வாலிபர்கள் இருவர் கைது


ADDED : பிப் 09, 2024 10:42 PM

Google News

ADDED : பிப் 09, 2024 10:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை, திருவொற்றியூர், பூங்காவனபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித், 33. இவர் மீது, நான்கு குற்ற வழக்குகள் உள்ளன. இரு தினங்களுக்கு முன், ராஜாகடையிலுள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தன் மகளை அழைத்து வர சென்றார்.

அங்கு அவரை மடக்கிய மர்ம கும்பல், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ரஞ்சித்தை வெட்டிக் கொல்ல முயன்றனர். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இதுகுறித்து, திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர். உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பவத்தில் தொடர்புடைய, திருவொற்றியூரைச் சேர்ந்த அரவிந்தன், 24, சுரேஷ், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த யுவராஜ், 23, திருவொற்றியூரைச் சேர்ந்த சாய்கணேஷ், 22, ஆனந்த், 32, கோகுல், 24, ஆகிய நான்கு பேரும், ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், ஏழாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன், சரணடைந்தனர்.

சரணடைந்தவர்களை, போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே, கொலை முயற்சிக்கான முழு காரணம் தெரியவரும் என, போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us