sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மதுக்கூடத்தில் முதியவரை தாக்கியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து இரண்டு பேர் கைது

/

மதுக்கூடத்தில் முதியவரை தாக்கியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து இரண்டு பேர் கைது

மதுக்கூடத்தில் முதியவரை தாக்கியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து இரண்டு பேர் கைது

மதுக்கூடத்தில் முதியவரை தாக்கியதை தட்டிக்கேட்ட வாலிபருக்கு கத்திக்குத்து இரண்டு பேர் கைது


ADDED : ஆக 05, 2025 11:07 PM

Google News

ADDED : ஆக 05, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்:மதுக்கூடத்தில், முதியவரை தாக்கிய போதை ஆசாமிகளை தட்டிக்கேட்ட நபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

புது பெருங்களத்துார், டேவிட் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ், 37. இவர், தி.நகரில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வருகிறார்.

பெருங்களத்துார், சித்ரா 'டாஸ்மாக்' கடை மதுக்கூடத்தில், நேற்று முன்தினம் மாலை மது அருந்தினார். அருகே முதியவர் ஒருவர் மது அருந்தியுள்ளார்.

இவர்களுக்கு அருகே, மது அருந்திய வண்டலுார், காந்தி நகரைச் சேர்ந்த நவீன், 28, புது பெருங்களத்துார், புத்தர் தெருவைச் சேர்ந்த ஜான்சன், 23, ஆகிய இருவர், போதை தலைக்கேறியதும், முதியவரை கேலி கிண்டல் செய்து, முகத்தில் தாக்கியுள்ளனர். இதை, பிரகாஷ் தட்டிக்கேட்டுள்ளார்.

இதில் இருதரப்பினர் ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். அங்கிருந்தோர் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளனர்.

ஆனால், மதுக்கூடத்திற்கு வெளியே, மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், நவீன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால், பிரகாஷின் இடது தோள்பட்டையில் வெட்டி, முதுகில் குத்திவிட்டு, ஜான்சனுடன் அங்கிருந்து தப்பினார்.

காயமடைந்த பிரகாஷ், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து விசாரித்த பீர்க்கன்காரணை போலீசார், நவீன், ஜான்சன் ஆகியோரை, நேற்று கைது செய்தனர். நவீன் மீது, மதுரவாயல், ஓட்டேரி காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.






      Dinamalar
      Follow us