sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

'மெக்கானிக் ஷெட்'டில் தீ விபத்து இரண்டு கார்கள் எரிந்து நாசம்

/

'மெக்கானிக் ஷெட்'டில் தீ விபத்து இரண்டு கார்கள் எரிந்து நாசம்

'மெக்கானிக் ஷெட்'டில் தீ விபத்து இரண்டு கார்கள் எரிந்து நாசம்

'மெக்கானிக் ஷெட்'டில் தீ விபத்து இரண்டு கார்கள் எரிந்து நாசம்


ADDED : அக் 25, 2024 01:42 AM

Google News

ADDED : அக் 25, 2024 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகில், பாலாஜி என்பவர் கார்கள் பழுது பார்க்கும் 'மெக்கானிக் ஷெட்' வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, பணிகளை முடித்துவிட்டு, பழுது பார்க்க வந்த கார்களை 'மெக்கானிக் ஷெட்' உள்ளே நிறுத்தி விட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 1:45 மணிக்கு, 'மெக்கானிக் ஷெட்'டில் இருந்து கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர், மறைமலை நகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், இரண்டு கார்கள் தீயில் எரிந்து நாசமாகின.

இது தொடர்பான புகாரின்படி, கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

இது குறித்து, போலீசார் கூறியதாவது:

மெக்கானிக் கடைக்குள் நிறுத்தப்பட்ட்டிருந்த இரண்டு கார்கள் தீப்பற்றி எரிந்து நாசம் அடைந்தன. மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை.

யாரோ வேண்டாத நபர்கள், தீப்பற்ற வைத்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், அங்கு பொருத்தப்பட்டுள்ள, சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us