sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தேவாதுாரில் குட்கா விற்பனை சகோதரர்கள் இருவர் கைது

/

தேவாதுாரில் குட்கா விற்பனை சகோதரர்கள் இருவர் கைது

தேவாதுாரில் குட்கா விற்பனை சகோதரர்கள் இருவர் கைது

தேவாதுாரில் குட்கா விற்பனை சகோதரர்கள் இருவர் கைது


ADDED : அக் 01, 2024 06:38 PM

Google News

ADDED : அக் 01, 2024 06:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த தேவாதுார் கிராமத்தில், குட்கா பொருட்களை தனி நபர்கள் சிலர் பதுக்கி வைத்து, விற்பனை செய்து வருவதாக, சித்தாமூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதையடுத்து, நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற சித்தாமூர் போலீசார், தேவாதுார் பகுதியில் சோதனை செய்தனர்.

அப்போது, செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இரும்பு கிடங்கில், செல்வதுரை, 44, மற்றும் அவரது அண்ணன் கண்ணன், 52 ஆகியோர், ஹான்ஸ், கூல் லிப், பான் மசாலா போன்ற, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 400 கிலோ குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அவர்கள் மீது, வழக்குப் பதிந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின், செல்வதுரை, கண்ணன் ஆகிய இருவரையும் கைது செய்து, செய்யூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us